தேனி மாவட்டம்,
உப்பார் பட்டி ஊராட்சி செயலகக் கட்டிடத்திற்கு ஒரு வருடம் கழித்து ஒப்பந்ததாரருக்கு கூடுதல் பணம் செலவானதாக தீர்மானம் நிறைவேற்றி பண மோசடி செய்துள்ளதாக
தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பார்பட்டி
ஊராட்சி செயலகக் கட்டடம் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் 2023 ஆகஸ்ட் மாதம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரருக்கு கடந்த 10.01.24, 05.02.24 மற்றும் 03.04.24 ஆகிய தேதியில் முழு பணம் வழங்கப்பட்டு விட்டது.
இதன் விவரங்கள் அனைத்தும் 23.05.24 அன்று முன்னால் உப்பார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரால் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), தேனி, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஒரு வருடம் கழித்து இந்த உப்பார்பட்டி ஊராட்சி செயலகக் கட்டடத்திற்கு மேலும் கூடுதல் பணம் செலவானதாக சொல்லி உப்பார்பட்டி ஊராட்சியின் பொது நிதியில் இருக்கும் தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்குவதற்கு உப்பார்பட்டி ஊராட்சியின் தனி அலுவலரான தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாக அனுமதி பெற வேண்டும்.
ஆனால் உப்பாரப்பட்டி ஊராட்சி பொது நிதியிலிருந்து ஊராட்சி கட்டிடம் கட்டியதற்கு கூடுதல் செலவானதாக தீர்மானம் நிறைவேற்றி தற்போது பண மோசடி நடைபெற்று வருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஊராட்சிகளின் வரி வசூல் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு அதிக பணம் ஊராட்சி பொது நிதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊராட்சி பொது நிதியில் இருக்கும் பணம் ஊராட்சி செயலகக் கட்டிடத்திற்கு ஒரு வருடம் கழித்து ஒப்பந்ததாரருக்கு கூடுதல் பணம் செலவானதாக தீர்மானம் நிறைவேற்றி பண மோசடி செய்துள்ளதாக
தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மைதிலி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.