தேனி மாவட்டம், போடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலை 85 ல் கிலோ மீட்டர், 185/4 அனைக்கரைப்பட்டி விலக்கு முதல் தர்மத்துப்பட்டி வரை புறவழிச் சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.

சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகளிடம் முறையான அனுமதி பெறாமல் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், 3 1/2 கிலோமீட்டர் சாலை அமைக்கும்பணி நடக்கிறது.

விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்த ஒப்புதல் இல்லாமல் சாலை அமைக்க 136 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது.

சாலை அமைக்கும் பணிக்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
நில உரிமையாளர்களிடம் எந்தவித ஒப்புதலும் இல்லாமல் சாலை அமைக்கும் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றன.