முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

வீரபாண்டி அரசு கல்லூரியில் ஜூன். 2 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

By Web Desk

Updated on:

---Advertisement---

தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறி வியல்கல்லூரியில் ஜூன்2 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் உமாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
2025-26ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான, முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ம் தேதி காலை 9 மணி முதல், சிறப்பு ஒதுக் கீடு(மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாது காப்பு படை வீரர்கள் மற்றும் அந்தமான் நிக்கோ பார் தமிழ் மாணாக்கர்கள்) பிரிவுக்கு நடைபெற உள்ளது

ஜூன் 4ம் தேதி பொது கலாய்த்தாய்வு இளங்கலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டில், கணிதம், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

முதுகலை ஆங்கிலம்,பொருளியல் கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

ஜூன் 4ம் தேதி பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை 14 தேதி வரையில் நடைபெற உள்ளது.

கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல், +1 மற்றும் +2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியர் சான்றுடன்), பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், பாஸ் போர்ட் அளவு புகைப்படம்-4, வங்கி சேமிப்பு கணக்குபுத்தக நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் கலந்தாய்வு காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்கு வர வேண்டும்.

கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்ட பின்னர் கல்விக் கட்டணம் செலுத்த அறிவுறுத் தப்பட்டு.
அதன் பின்னரே சேர்க்கை உறுதிசெய்யப்படும் என கல்லூரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளார்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது