
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய போஸ்ட் ஆபீஸ், ஓடை தெருவை சேர்ந்த மொக்கை பாண்டி (38)
மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வறுமையில் வாழ்ந்து வருகிறார். .
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக மாற்றுத்திறனாளிக்கான உதவி தொகைக்கு வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார்.
கடந்த 7 மாதங்களாக மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை.
மேலும் உரிய சான்றிதழ் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா அலைக்கழிப்பு செய்து வருகிறார்.
எனவே மொக்கைப் பாண்டிக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்