தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மே மாத சம்பளம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்காததால் அதிகாலை முதலே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கெங்குவார்பட்டி பேரூராட்சியில் கடந்த மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
மேலும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த 2023 -2024 ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 609 மற்றும் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 641 சம்பளம் வழங்காமல் நிலுவையில் உள்ளது.

இது குறித்து கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் இடம், துப்புரவு பணியாளர்கள் மே மாத சம்பளம் கேட்டால் உரிய பதிலளிக்க மறுத்து வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த கெங்குவார் பட்டி பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.