தேனி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், தேவையான உபகரணங்கள் வழங்கியதாக போலியான ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதை உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் மகளிர் குழுக்கள் மூலம் துப்புரவுபணி, மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சி மற்றும் 6 நகராட்சிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் முறைகேடு செய்து துப்புரவுபணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய முறையில் இஎஸ்ஐ, பிஎப்,கையுறை, காலணிகள், முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.
ஆனால் தேனி மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு உரிய முறையில் இஎஸ்ஐ, பிஎப், உள்பட பல்வேறு விதமான உபகரணங்கள் வாங்கியதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்த தேனி மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மோசடி செய்யப்பட்டுள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு உரிய விளக்கம் கேட்டு உள்ளாட்சி நிதி தணிக்கை துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற மோசடிகளை உரிய நடவடிக்கை எங்களால் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
எனவே இது குறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் உரிய விசாரணை நடத்தி துப்புரவு பணியாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், உபகரணங்கள், வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்த பேரூராட்சி நகராட்சி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.