முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

பரிவார் டெய்ரீஸ் 1500 கோடி மோசடி வழக்கு, அசல் ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு.

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரிவார் டெய்ரீஸ் அல்லைட் லிமிடெட் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர் சிபிஐ அதிகாரிகளிடம் அசல் ஆவணங்களை இன்று ஒப்படைத்தனர்.

மத்திய பிரதேசத்தை தலைமை இடமாகக் கொண்டு 2008 பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட் தொடங்கியது.

2010ல் மதுரையில் தலைமை இடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பல மாநிலங்களில் 1, 74,000 பேர் வரை 1500 கோடி பொதுமக்களிடம் வசூல் செய்து மோசடி செய்துள்ளது.

இந்த நிலையில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

மத்திய பிரதேசத்தில் இதே நிறுவனம் மோசடி செய்த விவகாரத்தை விசாரித்த மத்திய பிரதேச நீதிமன்றம் வழக்கை சிபிஐ வசம் மாற்றி ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்திலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தமிழகத்தில் நடைபெற்று வரும் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கடந்த 11.08.2018 ஆம் ஆண்டு அதிரடி தீர்ப்பை அளித்திருந்தார்.

தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சிபிஐ போலீசார் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

இன்று தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் பணம் கட்டி ஏமாந்தர்களிடம் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இன்று தேனி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டி ஏமாத்தவர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் அசல் ஆவணங்களை ஒப்படைத்தனர்.