தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியல் இன மக்கள் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு நீர்நிலை ஒடை அருகே அமைந்துள்ளது.
இந்த சுடுகாட்டில் சுற்றுச்சுவர், எரியூட்டும் கொட்டகை கட்டி முடிக்கப்பட்டு பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில் தற்பொழுது பட்டியலின மக்களின் சுடுகாடு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம் அமைக்க பணிகள் தொடங்கியுள்ளனர்.
இதற்கு பட்டியலின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையில், மின் மயானம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென பொது மக்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




