முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

சீலக்காரி அம்மன் கோவில் இரண்டு நாள் திருவிழா

By Web Desk

Published on:

---Advertisement---

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் அருகில் கே புத்தூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தாண்டாய் (எ) சீலக்காரி அம்மன் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழா இரண்டு நாள் நடைபெறுகிறது.

ஆடி மாதம் 23-ம் தேதி (08-08-2025) சிறப்பான ஆடி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியும், திருவோண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அன்று கே புத்தூரில் நம் குலத்தில் உதயமான பெண் தெய்வம் நம்மைக் காக்கும் தாண்டாய் (எ) சீலக்காரி அம்மன் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழா நடைபெறுகிறது.

ஆடி 23-ம் நாள் மாலை 6-00 மணிக்கு திருவிளக்கு பூஜை 08-08-2025 வெள்ளிக்கிழமை இரவு 11-00 மணிக்குமேல் சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வழிபாடு நடக்கிறது.

மாலை 6-30 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆரம்பமாகும்.( அம்மனுக்குரிய ஆடி மாதம் குல தெய்வத்தின் முன்பு பௌர்ணமி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொள்வது குடும்ப மகிழ்ச்சி, மங்கள ஐஸ்வர்யம், ஆரோக்கியம் கிடைக்கும் ) என தெரிவிக்கப்படுகிறது.

ஆடி 24-ம் நாள் (09-08-2025) சனிக்கிழமை காலை உணவுடன் அம்மன் பிரசாதம் வழங்கப்படுகிறது என இருளப்ப சுவாமி பங்காளிகள் மற்றும் சிறப்புக்குரிய பெண்மக்கள் இரண்டு நாள் திருவிழாவில் பொது மக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.